Powered by Blogger.

ATM ஒரு கோவில்

காசெனும் கடவுளைக் காண
கால் கடுக்க வரிசையில் நின்றிருந்தேன்;
ATM வாசலில்,
என்முறை வந்தது காடைச் சொருகி
காசை எடுத்தேன்;
சீட்டொன்று வந்தது,
இனி இங்கு வராதே,
உன் கணக்கில் காசேதும் மீதமில்லையென்று..
-தமிழ் கோ
(30.11.14)