விழிகளை தானம் செய்துவிட்டுப்போ..
அன்பே..
உன் விழியென்ன முடிவிலியாய் இந்த உலகிற்கு வெளிச்சம் தரும் தீபமோ?
மண்ணில் மனிதன் மறைவு என்பது இயற்கைதான்,
உன் மறைவிற்கு பிறகு ஏற்ப்படும் இருளில் தான் இந்த உலகின் அழிவு தொடங்குமோ?!!
உன் விழிகளை தானம் செய்துவிட்டுப்போ..
பாவம் இந்த உலகம் உன் பெயரைச் சொல்லி பிளைத்துக் கொள்ளட்டும்..!
-தமிழ் கோ
(16.11.14)
