Powered by Blogger.

பெண்ணால் என்ன செய்ய முடியும்?


பெண்னை வெறும் உடலென பார்க்குது கலியுகம்,
சரிநிகரென எண்ணுது என் மனம்,
இவள் நெருப்பில்லாதொரு தீபமாம்,
இவள்மேல் உலகிற்கேன் கோபமாம்?
இவள் அடிமையாய் இருக்கத்தான் விதியுள்ளதா?
இவளை அடிமை செய்த ஆண்களுக்குத்தான் மதியுள்ளதா?
விதியில் எனக்கு நம்பிக்கை இல்லை,
விதி இயற்ற முடியுமெனில் அது இவளன்றி வேறு யாருமில்லை,
என்ன செய்வாளென எண்ணினோம்,
எதையும் செய்யவல்லது பெண்ணினம்.
-தமிழ் கோ
(12.11.14)